'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Nov 16, 2019

நிலையாமை - கவிஞர் ச. பாலாஜி, சோளிங்கர்


(வண்ணப்பா)

வந்தது மேனோ சென்றது மேனோ
   வந்துள நாமே - தெளியோமே
வந்தவ(ர்) மேலே சென்றிடு(ம்) நாளே
   வந்துள நாமே - அறியோமே
சொந்தமு மேதோ பந்தமு மேதோ
   தொந்தர வானா(ல்) -  விலகாதோ
சிந்தையி னாலே இன்பம தாலோ
   துன்பம தாலோ குலையாதே

தந்தது தானோ கொண்டது தானோ
   இங்குள தாமே - பதறாதே
தங்கிடு மாறே வந்தவர் நாமே
   என்பதை நீயே - மறவாதே.
நிந்தனை யாலோ வந்தனை யாலோ
   கொஞ்சமும் நீயே - தளராதே
நொந்திடு மாறே வன்பகை யேனோ
   அன்பினை நீயே – பொழிவாயே

No comments:

Post a Comment