'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Dec 15, 2018

காதல் தேவி நீயே

நிர்மலா சிவராசசிங்கம்
அறுசீர் விருத்தம்

பூக்கள் மலர்ந்த தருணம்
பூவை உன்னைக் கண்டேன்
பாக்கள் வடிக்க நானும்
பாவை நீயும் நாண
ஏக்கம் மனத்தில் பிறக்க
என்னே பார்வை பார்த்தாய்
தூக்கம் கலைந்து போகச்
சுகமாய் நீயும் சிரித்தாய்

உள்ளம் மகிழ்வில் பறக்க
உண்மை மௌனம் பேசத்
துள்ளி வந்தேன் அருகில்
தூரத் தள்ளி நின்றாய்
கள்ள மற்ற பெண்ணே
காதல் வலையில் வீழ்ந்தேன்
அள்ளி அணைக்கத் துடிக்க
அசைந்து சென்றாய் நீயும்

எண்ணம் போன்ற வாழ்வு
எளிதாய்க் கிட்டு மன்றோ
கண்கள் கண்ட கனவில்
காதல் தேவி  நீயே
வண்ணக் கனவு  பலிக்க
மகிழ்வு பொங்கும் மனத்தில்
பெண்மை மகிழ்வு கொள்ள
பெருமைக்  கொடுத்தி டுவேனே

No comments:

Post a Comment