'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 18, 2019

சோலைக் கவியரங்கம் - 8


கவியரங்க நிறைவு கவிதை
தமிழகழ்வன் சுப்பிரமணி
வாழ்த்து
அன்பால் உலகம் மகிழ்வெய்த
... ஆளும் தலைமை சிறப்பெய்த
 
இன்பம் சூழத் துயர்தீர
 
... எண்ணி எண்ணிக் கவிசெய்த
 
நன்ன யங்கொள் நங்கவிஞர்
 
... நாளும் சிறக்க வாழ்த்துவமே!
இன்ன ருங்க னிச்சோலை
 
... என்றும் வாழ வாழ்த்துவமே!

இப்படித்தான் விடியும்.

விடியல் என்றால் என்ன?
... விடையாய் வருவ தென்ன?
விடுக்க வேண்டுவ தென்ன?
... வீடு பேறும் என்ன?
விடியும் நிலையொன் றுண்டு
 
... விடியா நிலையும் உண்டு
 
விடையைத் தேடிப் போவோம்
 
... விடியல் கண்டு வாழ்வோம்

துன்பநிலை கடப்பதுவே விடியல் ஆகும்
... துன்பநிலை துடைப்பதுவே விடியல் ஆகும்
 
அன்புவழி ஆளுவதே விடியல் ஆகும்
 
... ஆசைகளை விடுப்பதுவே விடியல் ஆகும்
சென்றநிலை நின்றநிலை தேர்ந்தெ டுத்துத்
 
... தேடுதலில் பெறும்விடையே விடியல் ஆகும்
இன்றுமுதல் ஒன்றெடுப்போம் என்னும் கொள்கை
 
... ஏற்றநிலை உளம்நிறுத்தல் விடியல் ஆகும்

குடியாலே விடியாத குடும்பங்கள் கோடி 
... குடிமகனாய்க் கடனாற்றாக் கோமான்கள் கோடி
 
மடியாலே விடியாத குடும்பங்கள் கோடி
... மற்றவரைக் குறைசொல்லும் மனத்தாராய்க் கோடி
விடியாதா? எனப்புலம்பி வீணிருப்பார் கோடி
 
... விதியென்று பேர்சொல்லி விளங்காதார் கோடி
 
படிக்காது பணியாது பண்படாது
 பற்றிப்
... பதிக்காது பயனெங்கே என்பாரும் கோடி

கற்றுப் பெற்ற மேன்மையினால் 
... கால்வைக் கின்ற செயல்களிலே
 
வெற்றி பெற்று விடிவதுவும்
 
... வெற்றுத் தனமாய் விடியாமல்
சுற்றித் திரிந்து போவதுவும்
 
... சுமையாய்ப் பூமிக்(கு) இருப்பதுவும்
 
உற்ற உளத்துத் தன்மையினால்
 
... உறுகு ளத்து நீர்ப்பூவாய்

                               நன்றி!
புவியறி வுறவே போற்றும் அறத்தைச் 
செவியறி வுறுத்தும் செம்மை நெறியைக்
 
கவியெனும் ஆற்றில் கடனாய் ஆற்றும்
 
கவிஞருக் கெல்லாம் கோடி நன்றி!

No comments:

Post a Comment