'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Feb 18, 2019

சோலைக் கவியரங்கம் - 8


பைந்தமிழ்ப் பாமணி
நியாஸ் அசன் மரைக்காயர்

• கணினிப் பொறியாளர்
• தமிழ் ஆர்வலர்
• பைந்தமிழ்ச் சுடர், பைந்தமிழ்ப் பாமணி பட்டம் பெற்றுள்ளார்.
• தினமணி ஈகை மலரில் கட்டுரை எழுதி உள்ளார்.
• சீறாவுக்கு உரை எழுதிய புலவர் காதிரசனா மரைக்காயருக்கு பேரன்.

கவிஞரை வரவேற்றல்

ஆராவல் அகத்தொளியா(து) அப்படியே உருப்பெருகச்
சேராற்றல் உலகமெலாம் சேர்த்துவிடும் நுட்பமென
நீராற்றல் பெற்றவரே நியா(சு)அசன் மரைக்காயர்
பேராவல் தீராமல் பெரும்பாடல் தானிசைப்பார்

நியா(சு)அசன் மரைக்காயர் அவர்களே வருக!
நிகரில்லாப் பெரும்பாடல் தருக!






                      இப்படித்தான் விடியும்
வண்ணப் பாடல்.
சந்தக் குழிப்பு.
தத்தத்தன தத்தத் தனதன 
தத்தத்தன தத்தத் தனதன
 
தத்தத்தன தத்தத் தனதன - தனதானா

இற்றைக்கொரு திட்டத் தலைநிலை
 கொட்டுப்பறை எட்டிப்பரகுவ
 இக்கட்டிலை மக்கட் பகையிலை - பெருநாளும்

 எட்டித்தொட மிச்சப் பொருளிலை
 கற்றுத்தர மெட்டுப் பொதுமறை
 இட்டப்படி சுற்றிப் பெருமழை - தமிழ்நாடு

முற்பட்டொரு புத்தப் புதுமுறை
 பட்டப்பகல் ஒட்டிச் சிலபல
 முத்துக்கலம் முப்பக் கமுமுள - மகிழ்வாக

 முத்துத்துளி பட்டுத் திருமொழி
 கட்டித்தமிழ் ஒட்டிப் பரவொளி
 முற்றத்தொரு அத்திக் கனியென - முழுதாக

நற்றைத்திரு கொட்டித் தருவன
 பச்சைப்பொருள் வெட்டிப் பகிரவும்
 நற்றிக்கென நட்பைத் தொடரவும் - இனிதாக

 நச்சுக்கிலை பச்சைப் பெருவெளி
 பச்சைப்பொருள் வித்துக்(கு) உழவரும்
 நட்பைப்பெற மெச்சப் பகலவன் - ஒளியாக

வெற்றித்திரு மக்கட் பெருவெளி
 சொக்கத்தகு கட்டுக்(கு) இளைஞரும்
 விட்டுச்சில சுற்றிப் பணிவன - பலகாளை

 வித்துக்கென பச்சைப் பெருவன
 பட்டப்பகல் முத்துப் பகலவன் 
 விற்கத்தகு சொத்துக்(கு) உழவரும் - ஒருநாளே

வாழ்த்துரை

குளம்நிறைய நீரெழவும் 
களம்நிறையக் கதிரெழவும்
 
வளம்நிறைய மகிழ்வுறவும்
 
உளம்நிறைய மதிதவழும்
 
நிலையெய்தக் கவிசெய்யும்
 
நியா(சு)அசன் வாழியவே


No comments:

Post a Comment