'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Oct 17, 2020

குறித்தபடி தொடுத்த பாடல்கள் – 20

1.       கவிஞர் பொன்.இனியன்,  பட்டாபிராம்

திகழ்செம் மொழியேநற் றேன்றமிழ்த் தாயே

புகல்வன வெல்லாம் புவிக்கே - இகலற

நீடவும் எண்பத மோங்கவு மாயுன்றன்

பாட மருள்வாய் பயந்து


2.       கவிஞர் பூங்கா  சண்முகம்

பாட மருள்வாய் பயந்துபயன் நோக்கிநெஞ்சே

கேடகத்தை ஏற்றியிசை கேட்போர்முன் -  கோடமர்ந்த

ஆடகப் பொற்கழலோய் தாள்தந்து ஞானமூட்டிப்

பாடமருள் வாய்பயந்தோய் நீ.

No comments:

Post a Comment