'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Oct 17, 2020

மருத்துவ வெண்பா – முலாம் பழம்

கவிஞர் வ.க.கன்னியப்பன் 

நேரிசை வெண்பா

 நீர்பெருகும் கட்டுடையும் நீங்காத வெப்பமறும்

பால்பெருகும் மங்கையர்பால் பஞ்சமிலைசீர்பெருகும்

நல்லமு லாம்பழத்தை நாவினிக்கத் தின்றவருக்(கு)

அல்லல் இனியே(து) அறி. 62

                                                   - பதார்த்த குண விளக்கம்

குணம்:  நல்ல முலாம் பழத்தினால் நீர் பெருகும். நீர்ச்சுருக்கு நீங்கும். சூடு தணியும். பாலுண்ணுங் குழந்தையை உடைய மாதர்க்குப் பால் சுரப்புப் பெருகும்.

பயன்படுத்தும் முறை: இந்தப் பழத்தின் மேற்றோலையும், விதையும் நீக்கிச் சிறு துண்டுகளாக அரிந்து, சர்க்கரை கூட்டி உண்ண ருசியாக இருக்கும். இதனால், உட்சூடு தணியும்.

No comments:

Post a Comment