2. பைந்தமிழ்ச் செம்மல் சியாமளா ராஜசேகர்
என்னால் என்ன செய்ய வியலும்
என்றே எண்ணிக் கலங்காதே
!
பின்னால் தூற்றும் கயவர் பேச்சைப்
பெரிதாய் மனத்தில் பதிக்காதே
!
இன்னா செய்தோர் நாணும் வண்ணம்
என்றும் நன்மை செய்திடுவாய்
என்றோ ஒருநாள் மாற்றம் நிகழும்
எழுக எழுத்தால் முனைப்புடனே
!! 1
துரத்தி அடிப்பாய் கொடுமைகளை
!
கிழக்கு வெளுக்கும் விடியல் மலரும்
கேடு விலகும் பனிபோலே
!
உழுத நிலத்தில் விளைச்சல் காண
உள்ளம் தானும் விழையாதா
?
எழுச்சி பிறக்கும் நலமே நடக்கும்
எழுத்தால் எழுக தமிழ்மகனே
!! 2
முன்னோர் எழுதி வைத்த தெல்லாம்
முனைந்து படித்தால் தெளிந்திடலாம்
!
குன்றாய் நிமிர்ந்து வாழும் வழியைக்
குறளின் நெறியால் அறிந்திடலாம்
!
கன்னல் தமிழில் கற்ற தெல்லாம்
கனிவாய்ப் பிறர்க்கும் சொல்லிடலாம்
!
இன்னும் ஆய்ந்து வீறு கொண்டே
எழுக எழுத்தால் துடிப்புடனே
!! 3
அடக்கி நசுக்கும் தலைமை எதிர்த்தே
அச்ச மின்றிப் போராடு
!
மடமை என்னும் மயக்கத் தோடு
மழுங்கிக் கிடக்கக் கூடாது
!
தடுக்கி விழலாம் தடைகள் வரலாம்
தாண்டி யோடப் பழகிவிடு !
எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க
எழுத்தால் எழுக ஊற்றாக
!! 4
ஏரைப் போற்ற உலகே செழிக்கும்
இளைஞர் கட்கும் புரியவைப்பாய்
!
பேரும் புகழும் பணத்தால் வாரா
பித்தம் தன்னைத் தெளியவைப்பாய்!
வீரத் தோடு விவேகம் இருந்தால்
வெற்றி என்றும் வசமென்றே
ஈர மனத்தோ டழுத்திச் சொல்லும்
எழுத்தால் எழுக துணிவுடனே
!! 5
பெண்கள் நாட்டின் கண்கள் என்று
பேணிக் காக்கக் கற்பிப்பாய்
!
பண்டை நாடாம் நம்தாய் நாட்டின்
பண்பாட் டைநீ நேசிப்பாய்!
வண்ணங் கொஞ்சும் கன்னித் தமிழை
வரமாய்க் கருதி சுவாசிப்பாய்!
எண்ணிப் பார்த்து நெஞ்சம் மலர்ந்தே
எழுக எழுத்துச் சீரோடே !! 6
தமிழன் பெருமை தமிழால் பேசித்
தரணிக் கெல்லாம் செப்பிடுவாய்
!
தமிழே முதலாம் தமிழே அமுதாம்
தகைமை தன்னை எடுத்துரைப்பாய்
!
தமிழின் இளமை தமிழின் வளமை
தப்பா மல்நீ உணர்த்திடுவாய்
!
இமய மெட்டச் செய்திடுவாய்
!! 7
பொய்யும் புரட்டும் களவும் கொலையும்
பொறாமைக் குணமும் இங்கெதற்கு
?
செய்யும் தொழிலை இறையாய் மதித்துச்
சிறப்பாய் உலகில் செயல்படவே
உய்யும் வழியை உயர்வாய்க் காட்டி
உரக்கச் சொல்ல எழுச்சியுடன்
எய்த அம்பாய்க் கொடுமை துளைக்க
எழுத்தால் எழுக கவிமகனே
!! 8
கூர்மை வேலும் வாளும் எதற்கு?
கோலுன் கையில் இருக்கையிலே
!
நேர்மைத் திறத்தை நிறைவாய்ப்
பெற்று
நெஞ்சில் உரத்தை வளர்த்திடவே
கார்மே கம்போல் பொழிந்து கருத்தால்
கனலாய்த் தெறித்து விழிப்பூட்டி
யார்க்கும் நலமே விளையும் விதத்தில்
எழுத்தால் எழுக திருமகனே
!! 9
No comments:
Post a Comment