2. பைந்தமிழ்ச் செம்மல் சியாமளா ராஜசேகர்
என்னால் என்ன செய்ய வியலும்
    என்றே எண்ணிக் கலங்காதே
!
பின்னால் தூற்றும் கயவர் பேச்சைப்
    பெரிதாய் மனத்தில் பதிக்காதே
!
இன்னா செய்தோர் நாணும் வண்ணம்
    என்றும் நன்மை செய்திடுவாய்
என்றோ ஒருநாள் மாற்றம் நிகழும் 
     எழுக எழுத்தால் முனைப்புடனே
!!          1
     துரத்தி அடிப்பாய் கொடுமைகளை
!
கிழக்கு வெளுக்கும் விடியல் மலரும் 
       கேடு விலகும் பனிபோலே
!
 உழுத நிலத்தில் விளைச்சல் காண
     உள்ளம் தானும் விழையாதா
?
எழுச்சி பிறக்கும் நலமே நடக்கும் 
     எழுத்தால் எழுக தமிழ்மகனே
!!                2
முன்னோர் எழுதி வைத்த தெல்லாம் 
    முனைந்து படித்தால் தெளிந்திடலாம்
!
குன்றாய் நிமிர்ந்து வாழும் வழியைக் 
    குறளின் நெறியால் அறிந்திடலாம்
! 
கன்னல் தமிழில் கற்ற தெல்லாம் 
    கனிவாய்ப் பிறர்க்கும் சொல்லிடலாம்
!
இன்னும்  ஆய்ந்து வீறு கொண்டே
     எழுக எழுத்தால் துடிப்புடனே
!!                3
அடக்கி நசுக்கும் தலைமை எதிர்த்தே
      அச்ச மின்றிப் போராடு
!
மடமை என்னும் மயக்கத் தோடு 
    மழுங்கிக் கிடக்கக் கூடாது
! 
தடுக்கி விழலாம் தடைகள் வரலாம் 
    தாண்டி யோடப்  பழகிவிடு !
எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க 
     எழுத்தால் எழுக ஊற்றாக
!!                      4
 ஏரைப் போற்ற உலகே செழிக்கும்
      இளைஞர் கட்கும் புரியவைப்பாய்
!
பேரும் புகழும் பணத்தால் வாரா
   பித்தம் தன்னைத் தெளியவைப்பாய்!
வீரத் தோடு விவேகம் இருந்தால்
        வெற்றி என்றும் வசமென்றே
ஈர மனத்தோ டழுத்திச் சொல்லும் 
     எழுத்தால் எழுக துணிவுடனே
!!               5
பெண்கள் நாட்டின் கண்கள் என்று 
     பேணிக் காக்கக் கற்பிப்பாய்
!
பண்டை நாடாம் நம்தாய் நாட்டின்
     பண்பாட் டைநீ நேசிப்பாய்!
வண்ணங் கொஞ்சும் கன்னித் தமிழை
    வரமாய்க் கருதி  சுவாசிப்பாய்!
எண்ணிப் பார்த்து நெஞ்சம் மலர்ந்தே 
      எழுக எழுத்துச்  சீரோடே !!                       6
தமிழன் பெருமை தமிழால் பேசித்
      தரணிக் கெல்லாம் செப்பிடுவாய்
!
தமிழே முதலாம் தமிழே அமுதாம் 
     தகைமை தன்னை எடுத்துரைப்பாய்
!
தமிழின் இளமை தமிழின் வளமை 
       தப்பா மல்நீ உணர்த்திடுவாய்
!
      இமய மெட்டச் செய்திடுவாய்
!!               7
பொய்யும் புரட்டும் களவும் கொலையும் 
      பொறாமைக் குணமும் இங்கெதற்கு
?
செய்யும் தொழிலை இறையாய் மதித்துச்
     சிறப்பாய் உலகில் செயல்படவே
உய்யும் வழியை உயர்வாய்க் காட்டி 
      உரக்கச் சொல்ல எழுச்சியுடன்
எய்த அம்பாய்க் கொடுமை துளைக்க 
     எழுத்தால் எழுக கவிமகனே
!!                  8
 கூர்மை வேலும் வாளும் எதற்கு?
    கோலுன் கையில் இருக்கையிலே
!
நேர்மைத்  திறத்தை நிறைவாய்ப்
பெற்று 
    நெஞ்சில் உரத்தை வளர்த்திடவே
கார்மே கம்போல் பொழிந்து கருத்தால்
    கனலாய்த் தெறித்து விழிப்பூட்டி
யார்க்கும் நலமே விளையும் விதத்தில் 
    எழுத்தால் எழுக திருமகனே
!!                   9
No comments:
Post a Comment