'தமிழ்க்குதிர்' பைந்தமிழ்ச் சோலையின் இணைய மின்னிதழ்

Sep 14, 2019

இனிமையாய் வாழ்க


பைந்தமிழ்ப் பாமணி சரஸ்வதிராசேந்திரன்

பிறப்பெல்லாம் ஒன்றே பிரிவேது மில்லை
பிறப்பின் சிறப்பே மனிதனாய் வாழ்வதே

படைப்பெல்லாம் ஒன்றே பாகுபா டில்லை
படைப்பின் பயனே பழுதிலாமல் வாழ்வதே

பண்பால் சிறக்கும் பழகுதமிழ் வாழ்க்கை
பழிதுடைத்(து) என்றும் வாழ விடும்

பாடுகின்ற பாக்கள் பொருள்பொதிந் திருந்தால்
பாங்குடன்  நிலைத்துப் புகழும் கொடுக்கும்

படிப்பற்ற வாழ்வு பயனற்றுப் போகும்
பகுத்துணர்ந்து படித்தால் பெரிதாகும் வாழ்வு

பிறப்பின் உரிமை இறப்பின் முடிவு
இருக்கும் வரையில் இனிமையாய் வாழ்க

No comments:

Post a Comment